திங்கள், 9 செப்டம்பர், 2013

வருத்தபடாத வாலிபர் சங்கம்- விமர்சனம்

வருத்தபடாத வாலிபர் சங்கம்-20/50

ரெண்டு மூணு குத்து பாட்டு/கொஞ்சம் காமெடி காட்சிகள்/வசனங்கள் இருந்து விட்டால் போதும் இந்த தமிழ்நாடு அரமண்டைய ரசிகர்கள் வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்று திமிரில் எடுக்க பட்ட படமாகவே இதை நான் சொல்வேன்..

கதையே இல்லை..
சம்பந்தம் இல்லாமல் வரும் காட்சி அமைப்பு....
சொதபலான திரைகதை.....
தெளிவு இல்லாத பாத்திர படைப்பு.....
இப்படி பல குறைகளை வைத்து கொண்டு இது ஒரு  சூப்பர் படம்(FEEL GOOD MOVIE) என்ற ரேஞ்சுக்கு பில்ட் அப் பண்ணி Promote பண்ணி விளம்பரங்கள் எல்லாம் ஓவராக பண்ணி மக்களை முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள்..

சிவ கார்த்திகேயன்-இவருடைய  Body language பார்க்கும் போது இவர் தன்னை ஒரு பெரிய ஸ்டாராகவே உரு வாகி விட்டதாக நினைக்கிறார் போலும்..
படத்தில் சமையல் செய்பவரை போல கலர் கலரா வேட்டி கட்டிக்கிட்டு வரார்....
ஒரு ஒரே + நன்றாக டான்ஸ் ஆடுகிறார்..

எதிர் நீச்சல் படத்தை போல தேர்ந்து எடுத்து அடக்கி வாசிக்காவிட்டால் மீண்டும் விஜய் டிவி கே போக வேண்டியது தான்...
முன்னேறுவதற்கு தான் நாள் ஆகும்.சறுகுவதற்கு சில தினம் போதும்...

சத்யராஜ்-இவர் நிலைமையை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது..ஒரு காலத்தில் ரஜினியை பற்றி எல்லாம் தெனாவெட்டாக பேசிக்கொண்டு/சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க கேட்ட போது நான் ஹீரோ எப்படி என்னை வில்லனாக நடிக்க கேக்கலாம்/நான் நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பார என்றெலாம் கேட்ட  மனுஷன் கேரக்டர் ரோல் கிடைக்க வேண்டும் என்பதற்காக விஜய் ஆரம்பித்து இப்போ சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களை பற்றி எல்லாம் மிக உயர்வாக பேசி காலம் தள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறார்...

சூரி-படத்தில் ஹீரோவுக்கு சமமாக இவர் இருக்கிறார்..சிவா டான்ஸ் ஆடுகிறார்.இவரும்.சிவா காதலிக்கிறார்..இவரும்...இவருக்கு என்று தனியாக பாடல் இல்லை...கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன் படுத்தி நடித்து இருக்கிறார்.....காமெடியன்கள் தட்டு பாடு உள்ள இந்த நேரத்தில் இவர் வாய்ப்பை  சரியாக நல்ல எதிர்காலம் உண்டு...

டைரக்டர் பொன்ராம்-காமெடி சென்ஸ்  உள்ள வளர்ந்து வரும் ஒரு நல்ல ஹீரோ/ஒரு நல்ல நடிகர்/காமெடியன் இப்படி ஒரு நல்ல டீமை வைத்து கொண்டு இப்படி சொதபலான படத்தை எடுத்து உள்ள இவரை எல்லாம் உதவி இயக்குனாராக  வைத்து கொண்டு ராஜேஷ்  ஹிட் குடுத்து இருக்கிறார் என்றால் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும்....

என்னை பொறுத்த வரை  மக்களை முட்டாளாக  நினைத்து எடுக்கப்படும்  இது போன்ற திரைப்படங்கள் புறகணிக்க பட வேண்டும்..அப்போது தான் தரமான படங்களை நாம் தமிழ் சினிமாவில் காண முடியும்....

வியாழன், 5 செப்டம்பர், 2013

Twitter இல் நான் கண்ட ஆசிரியர் தினம் சம்பந்தமான Intersting ட்வீட்ஸ்...

பள்ளிக்கூடத்திலே ஆசிரியரைப் பார்த்தால் எப்படிப் பதுங்குவேனோ அதே போலத்தான் இப்போதும் பதுங்குகிறேன் #பயம் #மரியாதை #வெறுப்பு

பசங்களுக்கு தர்ம அடி கொடுத்துட்டு பொண்ணுங்களுக்கு ஒழுங்கா படின்னு அட்வைஸ் பண்ற சாருங்க வரம் மாணவிகளுக்கு :)

யாராச்சும் சத்துணவு டீச்சரை சொல்றீங்களாயா? ரெண்டு மூனுவாட்டி வரிசைல நின்னு முட்டை வாங்குனதைலாம் மறந்துட்டீங்களா?

ஆசிரியர் வேறு ஊருக்கு மாறுதல் பெற்று கிளம்புவதையும் “குரு பெயர்ச்சி” என்று சொல்லலாம்!

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

தொலைந்து போனவைகள்....

இன்றைய நாகரீக வளர்ச்சியில் தொலைத்து போன அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் இல்லாத தூரி ஆடும் ஒரு ஆனந்த விளையாட்டு...ஆனந்தமாக விளையாடும் சுஜெய்................

எங்கள் சொந்த ஊரான 63 வேலம்பாளையம் கன்னிமார் கருப்பராயன் கோவிலில் நாங்கள் பங்காளிகள் (எங்கள் அய்யாவின் அண்ணன் தம்பிகள் மொத்தம் 4 பெரியவர்களின் வாரிசுகள்) அநேகம் பேர் வருட வருடம் (ஆடி மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை) சேர்ந்து பொங்கல் வைத்து சேவல் அறுத்து இந்த கோவிலிலேயே காலை முதல் மாலை வரை இருந்து பேசி சிரித்து மகிழ்ந்து இருப்போம் நாள் முழுவதும் ...

மிக அமைதியான இடம்....

பெரிய வெப்ப மரத்து காற்று...

ஒவொருவரும் ஒவொரு வேலையை செய்வார்கள்..

பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் சிலர்/கோழி சுத்தம் செய்ய சிலர்/தோட்டத்துக்கு சென்று மசாலா பொருகளை எல்லாம் அரைத்து வரும் சிறு வயது பெண்கள்/சமையலை கவனிக்கும் பெரியவர்கள் இப்படி ஒரே கொண்டாட்டமாக இருக்கும்......

அதன் பின் கிரிக்கெட் விளையாட்டு/பன்னான்கல்/தூரி ஆடுவது./பெரியவர்கள் சேர்ந்து அரட்டை அடிப்பது/ அவர்களின் வாழ்கையில் நடந்த சம்பவங்களை எல்லாம் மிக ரசனை பொங்க சொல்வதை கேட்பது ஒரு மிக சுகமான அனுபவம் ...
அந்த அனுபவம் எல்லாம் அனுபவித்தால் தான் தெரியும்....
சுஜெய் போன்ற சின்ன பசங்களில் இருந்து எங்கள் அப்பா/அம்மா/பெரியப்பா/பெரியம்மா/சித்தப்பா/சித்தி/அண்ணன்/அண்ணி/அக்க/மச்சான்/தங்கச்சி/மாப்பிள்ளை/தம்பி/எல்லா குட்டிஸ் உட்பட அனைத்து வயதினரும் என்ஜாய் பண்ணும் நாளாக இருக்கும்...

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் இந்த சுகமான அனுபவத்தை பெற ஒன்று கூடி கடவுள் பெயரால்..








தலைவா-சினிமா விமர்சனம்..

தலைவா-25/50

முதல் பாதி ஆஸ்திரேலியாவில் விஜயின் ன் அசத்தலான அறிமுகம்/ சந்தானம் மற்றும் நண்பர்கள்..அமலாபால் விஜய் காதல்/துள்ளலான பாடல்கள்/அருமையான AUSTRALIA LOCATION என்று மிகவும் கலகலப்பாகவே செல்கிறது...

இடைவேளைக்கு பிறகு தான் ஒவொரு காட்சியிலும் காமெடி களை கட்டுகிறது..சில காமெடி காட்சிகள் கீழே..

கூடி இருக்கும் மக்களை பார்த்து விஜய் கை அசைப்பது...

விஜய் பில்டர்களிடம் நான் பாத்துகிறேன் சொல்றது...

பஞ்சு அவர்தான் பாத்துகிறேன் சொல்றார்லே...நான் உங்களை நம்பறேன்னு சொல்றது.........

அமலா பால் போலிசாக வந்து வீர வசனம் பேசுவது...

விஜயை பார்த்து நீங்க தான் தம்பி எங்களை காப்பதணும்னு எல்லோரும் கண்ணீர் விடுவது......

கலவரம் நடக்கற எடத்துல விஜய் வந்து எல்லோரையும் காப்பாத்துவது.........

விஜய் ஊர்ல உள்ள எல்லா ரௌடிகளையும் கூப்பிட்டு இனிமேல் எந்த தப்பும் செய்யகூடாதுனு மிரட்டுவது..

தலைவா தலைவா பாடலில் முஸ்லீம் மற்றும் உலகத்துலே எந்தெந்த மதம் எல்லாம் இருக்கோ அத்தனை மதத்தை சேர்ந்த 80/90 வயசு பெரியவங்க எல்லோரும் கை எடுத்து கும்பிடுகிட்டே இருப்பது ...

இதை விட உச்சகட்ட காட்சி.
கடைசி சீனில் சந்தானம் பென்சில் மீசை வெச்சுகிட்டு வக்கீல் ஐயா உங்களை பார்க்க வந்திருகாங்கனு சொல்லும்போது விஜய் குறுந்தாடி வெச்சுகிட்டு ஜிப்பா போட்டுகிட்டு சிகப்பு சால்வை எடுத்து போர்த்துவது.............

ஆனா ஒன்னு பொது மக்களுக்கு தான் ரெண்டாவது பகுதி காமெடியா தெரியுது..விஜய் ரசிகருக்கு சரியான மாஸ் படம்...

விஜய் மிகவும் ப்ரெஷா இருக்கார்..டான்ஸ் எப்போவும் போல கலக்குறார்....அதுவும் முதல் தமிழ் பசங்க பாடல் சூப்பர்....அதனை அழகு/நளினம்......

சந்தானம் வழக்கம் போல ஒ.கே...

சத்யராஜ் கேரக்டர் மிக அருமை..நன்றாக செய்திருக்கிறார்..
அது போல சுரேஷ்/பொன்வண்ணன்/விஜய் கூட வரும் இளைஞர்கள் எல்லோரும்.....

இரண்டு விஜயும் தேவை இல்லாமல் இந்த கதையை எடுத்திருகிறார்கள்....பாட்சா போல படத்தை எடுக்கலாம் என்று முயற்சி செய்து இருக்கிறார்கள்..
இனிமேல் இந்த மாதிரி காட்பாதர் கதை எல்லாம் ரஜினி நடித்தால் கூட எடுபடாது என்பதே என் கருத்து...
இனிமல் ரெண்டு விஜயும் கதையில் கவனம் செலுத்த வேண்டும்...

Better LUCK NEXT TIME not only to 2 VIJAY's also to People like me who has soft corner for Vijay who expect good movies from him like nanban/thupaaki..
தங்க மீன்கள்-40/50.

விறுவிறுப்பான திரைக்கதை இல்லை/காமெடி சூப்பர் ஸ்டார்கள் நடிக்கவில்லை/திடீர் திருப்பங்கள் இல்லை...
ஆனாலும் படம் போர் அடிக்காமல் மென்மையாக செல்கிறது 

இரண்டு விசயத்தை தெளிவாக படம் தெளிவாக சொல்ல வருகிறது.....

ஒன்று தனியார் பள்ளிகளின் தரமான கல்வி என்கிற பேரில் நடக்கிற கொள்ளை....
இரண்டு அதன் மீதான மோகத்தால் நடுத்தர உண்மையாய் சம்பாதிக்க நினைக்கிற ஒருவன் படுகிற சிரமங்கள்...

இயக்குனர் ராம் நன்றாகவே நடித்து இருக்கிறார்.
அந்த குழந்தை அருமை..
ஏனைய நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாகவே அளித்து இருக்கிறார்கள்.ராமின் அப்பா/மனைவி/அம்மாவாக வரும் ரோகினி எல்லோருமே...

படத்தில் ஒவொவொரு காட்சியும் அழகு.LOCATION தேர்வுக்கு ஒரு சபாஸ்....
இதற்கு உயிர் குடுக்கும் வகையில் யுவனின் இசை...
அதுவும் ஆனந்த யாழை பாடலை பார்க்கும் போது மனதில் ஏற்பட்ட பரவசம்/சந்தோசம் என் மனதில் இன்னும் அப்படியே இருக்கிறது.......
இளையராஜாவின் பாடலுக்கு பிறகு யுவனால் மட்டுமே இதை செய்ய முடிகிறது....
முன்னர் ராம் படத்தில் வரும் ஆரோரீரோ பாடலில் இதை உணர முடிந்தது...

படத்தில் ஆங்காங்கே ஒரு சில குறை இருந்தாலும்,
இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்...

இன்னொன்று குழந்தையை குழந்தையாய் வளருங்கள்...

அவர்களை அவர்கள் விருப்படி படிக்கச் செய்யுங்கள்...

எப்போதும் படி எழுத்து என்று டார்சர் செய்யாதீர்கள்...

அப்படி செய்யும் டார்சர் நீங்கள் பெருமையாக என் குழந்தை இது வரைக்கும் எழுதும் படிக்கும் என்று சொல்ல தான் பயன்படுமே தவற அந்த குழந்தைக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை....