செவ்வாய், 26 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம்--30/50

டைரக்டர்களில் பல வகை உண்டு.

1) வழக்கமான கதையை ரசிக்கும்படியான திரைக்கதையுடன் படம் எடுக்கும் கே எஸ் ரவிக்குமார்/ஹரி போன்றவர்கள்
2) வித்தியாசமான கதை மக்கள் ரசிக்கும் படி சொல்லும் ஷங்கர்/பாலாஜி சக்திவேல் போன்றவர்கள்
3) கமர்சியல் படம் எடுக்கிறேன் சொல்லிக்கிட்டு எந்த ரிஸ்கும் எடுக்காமல் மொக்க படம் எடுக்கும் பேரரசு/சக்தி சிதம்பரம் போன்றவர்கள்.

இதில் முதல் 2 வகை நாம் நினைக்க வேண்டியதே இல்லை.எப்படியும் வெற்றி பெற்று விடுவார்கள்.
3வது வகை பற்றி நாம் கவலை படவேண்டியது இல்லை என்ன அவுங்க ரிஸ்கும் எடுக்கிறது இல்லை அதனாலே பெரிய வெற்றியும் பெறுவது இல்லை.

அனால் செல்வராகவன்/மணிரத்தினம் போன்றவர்கள் நிலைமையை தான் என்னன்னு சொல்றதுன்னு தெரியலே.
ரொம்ப வித்தியாசமா யோசிச்சு ரொம்ப கஷ்டப்பட்டு மிகுந்து பொருள் செலவில் படம் எடுப்பார்கள்.
ஆனால் அந்த படமும் ரசிக்கும் படி இருக்காமல் போவது தான் கவலை பட வைக்கிறது..

அப்படி பட்ட ஒரு படம் தான் இரண்டாம் உலகம்...

மிக வித்தியாசமான சிந்தனை.அதற்கு ஏற்றார் போல VFX வேலைகள்.இரண்டு முன்று வருட உழைப்பு..இதனையும் செய்தும் படம் ரசிக்கும் படி இல்லை என்பது தான் உண்மை..

Fantasy Movie எடுக்கும் போது நான் ஈ எந்திரன் போன்ற மக்கள் ரசிக்கும் படி செய்து இருக்க வேண்டும்..

இந்த படத்தில் நமக்கு தெரியாத ஒரு உலகத்தை காட்ட முயற்சி செய்து இருக்கிறார் செல்வா,,
ஆனால் நமக்கு தான் பிடிக்கவில்லை.

ஆர்யா -முதல் பாதியில் சுமாரான நடிப்பு.இரண்டாவது பாதியில் பெரிய ரிஸ்க் எடுக்கமால் தேமே  என்று வருகிறார்  ஆனால்  ஒன்று   ஒழுங்கா நடிகவிட்டலும் படத்தின் PROMOTION வேலைகளில்  கதாநாயகிகளோடு சேர்ந்து நன்றாக எல்லா டிவி சேனல்களிலும் செய்கிறார்.

அனுஸ்காவுக்கு நடிக்க  நெறைய  வைப்பு.நன்றாகவே செய்து இருக்கிறார்..

இவர்கள் இருவரை தவிர படத்தில் நினைவு இருக்கும் பாத்திரங்கள் அனுஷ்கா தோழியாக வரும் பொண்ணு மற்றும் ஆக வருபவர் இருவருமே நன்றாக நடித்து இருக்கிறார்கள்..

அனுஸ்காவிடம் அவரின் தோழி மருத்தவர் பாஷையிலேயே ஆர்யாவை விவரிப்பது/ஆர்யாவும் அவரின் நண்பரும்  பேசிக்கொள்ளும் காட்சி மற்றும் ஆர்யா ப்ரோபிச்சொரை தான் காதலிபதாக  சொல்லும் காட்சி போன்ற காட்சிகளில் செல்வா டச்..

இனிமேலாவது செல்வராகவன் ஜனரஞ்சமான மக்கள் ரசிக்கும்படி படம் எடுப்பார் என்று நம்பலாம்.
அப்படி செய்தால் தொடர்ச்சியாக வெற்றியை கண்டிப்பாக தருவார் என்று நம்பலாம்.

இன்று கூட இனிமேல் சிறிய பட்ஜெட படங்களை எடுக்க போவதாகவும் action படம் எடுக்க போவதாகவும் சொல்லி இருக்கிறார்...நிச்சயம் வரவேற்போம்.இது போன்ற நல்ல கலைஞர்கள் வெற்றி பெற வாழ்த்துவோம்  

சனி, 9 நவம்பர், 2013

அழகுராஜா-சினிமா விமர்சனம்.

(மிகுந்த கோபத்துடன்) அழகுராஜா-சினிமா  விமர்சனம்....- 20/50.

எனக்கு என்னமோ காமெடி படங்களின் காலகட்டம் முடிந்தது என்று தான் தோன்றுகிறது...

வர வர காமெடி எது மொக்கை எது என்று தெரியாமல் படம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்..

இனிமேல் டைரக்டர் ராஜேஷ் தன் பட பாணியை மாத்த வேண்டியது அவசியம் வெறும் சந்தானத்தை நம்பி படம் எடுத்தால் பார்க்க ஆள் இருக்க மாட்டார்கள்......

பருத்திவீரன்/ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்து நல்ல பேர் பெற்ற திறமையான நடிகர்  கார்த்தி ஏன் சந்தானத்தை நம்பி கமர்சியல் படங்களில் நடிக்கிறார் என்று தெரியவில்லை.
தொடர்ச்சியாக சகுனி/அலெக்ஸ் பாண்டியன் இப்போது அழகுராஜா பிளாப்.......

கதை சரியாக தேர்வு செய்து கண்டிப்பாக அடுத்த படமான பிரியாணியில் இருந்து வெற்றி படங்களாக குடுப்பார் என்று நம்புவோம்.....

சந்தானம்-காமெடியன்கள் பஞ்சம் உள்ள இந்த காலகட்டத்தில் சந்தானம் எல்லா படங்களிலும் நடிப்பதால் அவருடைய காமெடி சலித்து போய் விட்டது......
கவுண்டமணி/வடிவேல் காமெடி எல்லாம் சலிக்காமல் இருபதற்கு கரணம் அவர்களது காமெடி இல்லாமல் அவர்களது body language தான் நம்மை சிரிக்க வைத்தது.
ஆனால் சந்தானம்/விவேக் காமெடி எல்லாம் timing காமெடி அதனால் தான் விவேக்கால் நிலைத்து நிற்க முடியவில்லை.அவரும் வித்தியாசமாக நடித்தால் தான் படிக்காதவன்/மாப்பிள்ளை/உத்தமபுத்திரன் போன்ற படங்களில் பேர் பெற முடிந்தது....
சந்தானம் உஷார்......

சும்மா சும்மா சிரிபவர்கள் மட்டும் இந்த படத்தை பார்க்கலாம்.....